Posts

Showing posts from October, 2018

கனாக் கண்டேன் 5

Image
                            கனாக் கண்டேன் 5 பூலோகத்திற்குள் உள்ள தனி உலகம். காலத்தால் என்றும் அழியாத நினைவுகளின் கருவூலம் கல்லூரி . இந்தக் கல்லூரி வாழ்க்கை தான் கட்டற்ற வானில் கவலை இல்லாமல் சிறகடித்துப் பறப்பதற்கு பலருக்கு சிறகுகளைத் தருகிறது. அந்தச் சிறகுகளைக் கொண்டு அவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாழ்க்கையின் திருப்பு முனையாவும் உள்ளது.               ராகுலுக்கும் அப்படித்தான் அவனுடைய  இந்தக் கல்லூரி வாழ்க்கையை பல கனவுகளுடன் காதலையும் கொண்டுள்ள அவன் எவ்வாறு கடக்க போகிறான்??!... பார்ப்போம் ✍✍✍                   வாகன நெரிசல் நிறைந்த நகரத்தில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன்  முக்கிய சாலையில் இருந்து கல்லூரி பேருந்து 🚌 சிறிய சாலை வழியாக செல்கிறது. சாலையின் இருபுறமும் வயல்வெளி ஆங்காங்கு மரங்கள் என அழகிய சோலை வழியாக செல்லும் சாலையின் வழியாக பேருந்து செல்கிறது 🚌.   கல்லூரியின் பின்ப...

இருதயம் இருகுகிறது!!!

Image
இதயம் இருகுகிறது!!! இன்றைய நிகழ்வுகள் நாளைய காயங்களாக நேற்றைய நினைவுகள் இன்றைய  நிகழ்வைத் தீர்மானிக்கிறது!!! விழி தந்த வலிகள் வழி அறியாது இதயத்தை அடைந்து அடைக்கலம் பெறுகிறது!!! காலத்தில் கரைந்து போன காலங்கள் மீண்டும் கை கூடாதா என கலக்கத்தில் திழைக்கிறது நெஞ்சம்!!! நிகழ்ந்தவை நினைவுகளாகக் கொல்ல  நிகழ்பவை நினைவுகளை நினைவுபடுத்துகிறது!!! எதிர்கால வாழ்வு என எண்ணியது நிகழ்கால வாழ்வை  நித்தமும் ரணமாக்குகிறது!!!  உயிரோடு உயிராய் கரைந்து விட்டது என எண்ணியது உயிருடன் உயிரை உறைய வைக்கிறது!!! மாற்றங்களுடன் மாறிய இதயம்  மறுபடியும் மனம் மாறிவிடாதா என மனம் நாடுகிறது!!! இருகின்ற நிமிடங்கள் இல்லாமல் இருக்க இல்லாத ஒன்றை இருக்க வேண்டும் என எண்ணி இருதயம் இருகுகிறது!!!

கலங்கும் என் விழிகள்!!!

Image
              கலங்கும் என் விழிகள்!!! மனம் காணும் மார்க்கம் உண்மை அறிந்த கண்களுக்கு அகப்படவில்லை!!! காரணமின்றி கலைக்கப்பட்ட மனம் காண்பது வெறும் கனவென்று அதற்கு தெரியவில்லை!!! கண்ணாடியை நோக்கி எறியப்பட்ட கல் அக்கண்ணாடியில் ஏற்றபட்ட காயத்தை ஆற்றுவதில்லை!!! ரோஜாவை பறிக்கும் கரங்கள் காயப்படுவதில் ரோஜாவின் மீது குற்றமில்லை!!! நிகழ்வதை அறிய தெரிந்த மூளைக்கு  மனதுக்கு புரியவைக்க தெரியவில்லை!!! பூக்களை நாடி வரும் வண்டுகள் அதில் மயங்கிக் கிடப்பதில் வண்டுகளின் மீது தவறில்லை!!! மனம் என்று ஒன்று இருந்தால் அதில் மயக்கங்கள் வருவது புதியதில்லை!!! மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று மனதுக்குத்தான் தெரியவில்லை!!! மாற வேண்டும் என தெரிந்த மனதுக்கு அதற்கான வழிகள்தான் புரியவில்லை!!! புரிந்து கொண்ட வழி ஏற்படுத்தும் வலிகளை புரிந்து கொண்டவர் அறிவதில்லை!!! வழியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை!!! காலங்கள் கடந்தாலும் கல்வெட்டின்  எழுத்துகள் மாறுவதில்லை!!! இப்படிக்கு காயப்பட்ட...