Posts

Showing posts from February, 2019

ஆளில்லாத வீட்டிலும் டோர் டெலிவரி

Image
ஆளில்லாத வீட்டிலும் "டோர் டெலிவரி" கடந்த மாதத்தில் வால்மார்ட் நிறுவனம், இணையதளத்தில் 'ஆர்டர் கொடுத்த பொருட்களை சம்பந்தப்பட்ட முகவரியில் ஆள் இல்லாவிட்டாலும் வீட்டைத் திறந்து பொருளை வைத்துவிட்டு வரும் முறையை பரிசோதித்துப் பார்த்தது. அவர்கள் 'ஒன் டைம் பாஸ்வேர்டு' எனும் யுத்தியில் வினியோகிப்பவர் ஒரு முறை மட்டுமே வீட்டிற்குள் நுழையும் வசதியை அறிமுகம் செய்தனர். உலகின் மிகப்பெரும் இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் இதில் மேலும் பல புதுமைகளைப் புகுத்தி ஆளில்லா நேரத்திலும் பொருட்களை வினியோகம் செய்யும் முறையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இவர்கள் கிளவுட் நுட்பத்துடன் கூடிய கேமரா, எலக்ட்ரானிக் பூட்டு ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். சரியான டிரைவர் சரியான முகவரிக்குச் செல்கிறாரா என்பதை கண்காணிக்கிறார்கள். பாஸ்வேர்டு இல்லாமல் -வாசலை அடைந்ததும் விட்டுக்காரர் ஓகே என்று அனுமதி வழங்கியதும் உள்ளே செல்லவும், அந்த வீடியோ செல்போனில் பதிவாகும் முறையையும் அறிமுகம் செய்துள்ளனர். 'அமேசான் கீ' எனப்படும் இந்த நுட்பம் வீட்டின் பாதுகாப்பையும் பலமடங்கு அதிகப்படுத்துகிறது...

நிலவில் உள்ள லாவா குழாய்களும் மனித வாழ்க்கையும்!!!

Image
நிலவில் உள்ள லாவா குழாய்களும் மனித வாழ்க்கையும்!!! நிலவுக்கும் நமக்குமான பந்தம் மிகச் சிறு வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டுவிட்டது. சிறுவயதில் நிலவைக் காட்டி அம்மா சோறு ஊட்டியதும், அந்த நிலவில் பாட்டி அமர்ந்து வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று அம்மா கூறிய கதையும் நம்மால் மறக்க முடியாது. இன்று அதே நிலவில் சென்று வாழ்வதற்கான ஆயத்தங்களை உலக விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகத் தெரியும் நிலா நிஜத்தில் அப்படி இல்லை. மனித வாழ்க்கைக்கு ஏதுவான அடிப்படை வசதிகள் இல்லாத ஆபத்தான தட்ப வெப்ப சூழல்களைக் கொண்ட ஒரு வெற்று நிலப்பரப்பாகத்தான் இருக்கிறது நிலவு. மனிதன் நிலவில் சென்று வாழ வேண்டுமானால், முதலில் அங்கு செல்லும் விண்வெளி ஆய்வாளர்கள் தாங்கள் பயணம் செய்த விண்வெளி கருவியை விட்டு வெளியேறி, நிலவின் நிலப்பரப்பில் தங்கி வாழ்வதற்கான சூழலை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதன் பிறகு தான் அங்கு குடியிருப்புகளை நிறுவும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், சமீபத்தில் நிலவில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பிய ஜப்பான் நாட்டு ...

குகைக்குள் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்

Image
குகைக்குள் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்!!! உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா? வியட்நாமில் உள்ள 'சான் நீங்' குகைதான் இது சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்தக் குகையின் உள்ளே ஒரு காடும், ஆறும், குட்டி கடற்கரையும் உள்ளன. இதன் உள்ளே ஒரு 40 மாடி கட்டிடத்தை கட்டி விடலாம் என்றால் இதன் பிரமாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள், இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1991 வரை இந்தத் குகை முதன் முதலில் உள்ளூர் விவசாயி ஒருவரால் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது.  அதன் வாயிலில் இருந்த மெகா பள்ளத்தைக் கண்டு யாரும் உள்ளே நுழையத் துணியவில்லை. 2009-ல் தான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே இறங்கினார்கள். மனிதன் இறங்க அஞ்சிய இந்த நுழைவாயில், 200 மீட்டர் ஆழம் கொண்டதாகும். பாதுகாப்பாக கயிற்றைக் கட்டிக் கொண்டு தான் இதற்குள் இறங்க வேண்டும். அதன் மறு முனையில் என்ன இருந்தது என்பதை அறிந்த போது அதை பார்த்தவர்கள் வாய் பிளந்து ஆச்சரியத்தில் உறைந்தார்கள். அதற்கு அடுத்த பக்கம் ஒரு தனி உலகமே இருந்தது. உள்ளே ஒரு மழை காடே இருந்தன. தனி ஆறு இருந்தது. சிறிய பெரிய குளங்கள் இருந்தன. ஏன், த...