Posts

Showing posts from January, 2018

விழிகள் சந்தித்தன

Image
விழிகள் சந்தித்தன ஈரமான இதவெயில் தென்றல் காற்று கார்குழலில் மோத இனியவை சொல்லி பறக்கும் பச்சிளம் பச்சிகளும் கூட பாடல் சொல்ல கடந்து செல்லும் வாகனங்களின் சத்தம் கூட கவிதையாய் கேட்க சின்ன சின்ன செல்லக் குழந்தைகளின் சுட்டு விரல் ஸ்பரிசம் சுகமளிக்க இதயம் உயிரைக் காணும் கணங்கள் இது என கண்களுக்கு கடிதம் எழுத உடலில் ஒடும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் இதயம் உணர சந்தனமும் பன்னிரும் மயிலிரகால் தெளித்தாற்போல் அங்கமெங்கும் சிலிர்க்க அணுவணுவாய் அடுக்கி ஆக்கப்பட்ட அங்கம் தங்கமென கொண்ட தேவலோக அரம்பையருள் தேடினாலும் கிட்டாத தேவதை உடலை விடுத்து உயிரைக் கொன்றாற்போல் நெஞ்சத்தை  ஆட்கொள்ள காதல் என்னும் கண்ணாடி  கூண்டுக்குள் சிக்கிக் கொள்ள இருவர் "விழிகளும் சந்தித்தன".                                                 

இரவில் ஒரு பயணம்

Image
இரவில் ஒரு பயணம்         கார்குழல் வானில் மின்னிடும் வெண்ணிற மல்லிகை மொட்டுக்களின் அணிவகுப்பு பௌர்ணமி கடந்து தினங்கள்  ஆயினும் கார்குழல் வானிற்கு இடையில் பிரகாசிக்கும் முழுநிலவொளி வெயிலும் அல்லாமல் மழையும் அல்லாத பொழுதிலும் இரவில் இருண்டு காணக்கிடைக்கும் வானவில்கள் ஆளைப் புரட்டிப்போடும் புயல் மழைக்கு சித்தமாக,வண்ண மயில்கள் தோகை விரிக்கும் பொழுதில் கண்ணைப் பறிக்கும் யுகநேர மின்னல் வெட்டு்க்கள் சூறைக்காற்றைத் தோற்க்கடிக்க மலைக்குகைகளில் இருந்து வீசும் சூடான தென்றல் காற்று தேனெடுக்க வண்டுகள்  தேடியலையும் தேன்வடியும் ஜோடி செங்காந்தள்கள் ஆழிப்பெருங்கடல்களிலும் காணப்பெறாத இரட்டை வெண்ணிற பவளப்பாறைகள் அதற்கடியில் குயிலினும் இனிய சப்தத்தை எழுப்பும் ஒற்றை வலம்புரிச்சங்கு என இரவின் இனிமையும் வளமையும் மேலும் தொடர்ந்து கொண்டிருக்க அவற்றை வர்ணிக்க வார்த்தையின்றி இனிமையை எண்ணி மனம் செல்ல "இரவின் பயணம்" தொடர்கிறது.                      ...